Karththaveerarjunar Homam conducted in Danvantri Peeadm on 18th September 2016 for Kaveri Problem

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய, பீடத்தில், ஸ்தாபகர் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் இன்று 18.09.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 11. மணியளவில் காவிரி நீர் பிரச்சினை சுமுகமாக முடிந்து, தமிழகத்துக்கு நியாயமான முறையில் நீர் வரத்து கிடைக்கவும், கர்னாடக வாழ் தமிழ் மக்கள் இழந்த நிம்மதியை மீண்டும் பெறவும் தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனருக்கு சிறப்பு ஹோமமும், சிறப்பு ப்ரார்தனையும் நடைபெற்றது. இதில் தன்வந்திரி குடும்பத்தினர், சேவார்திகள் மற்றும், பொது மக்கள் கலந்து கொண்டு ப்ரார்த்தனை செய்தனர்.

இதனை தொடர்ந்து 3 வது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆண்கள் திருமணத் தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமமும் நடை பெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், ஆந்திரா மற்றும் பாண்டிச்சேரியில் இருந்தும் ஆண்கள் கலந்து கொண்டு ப்ரார்த்தித்துக் கொண்டனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Upcoming Events
Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images