

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகரும் பீடாதிபதியுமான “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 07.10.2019 திங்கள்கிழமை தெலுங்கானா ஆளுனர் உயர்திரு. டாக்டர். தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் இல்லத்தில் சந்தித்து வருகிற 03.11.2019 ஞாயிற்றுக்கிழமை பீடத்தில் நடைபெற உள்ள ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி பிரதிஷ்டா வைபவம், 1008 சுமங்கலி பூஜை, ஸ்வாமிகளின் 59 ஆவது ஜெயந்தி விழா, ஸ்ரீ மஹா சுதர்சன தன்வந்திரி திருஷ்டி துர்கா கோடி ஜப ஹோம பூர்த்தி விழா, குருப்பெயர்ச்சி யாகம் 2019 – 2020 என்னும் ஐம்பெரும் விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் அளித்து பீடத்தில் நடைபெற்று வரும் ஹோம பூஜைகளின் பிரசாதங்களையும், அருளாசிகளையும் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.