

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், உலக க்ஷேமத்திற்காகவும் சென்ற 26.04.2012 முதல் 25.05.2013 வரை நடைபெற்ற 365 நாள் – 365 யாகம், ஏகோபித்த பக்தர்கள் வேண்டு கோளுக்கிணங்க இரண்டாவது முறையாக 01.01.2020 புதன்கிழமை மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து 23வது நாளான இன்று 23.01.2020 வியாழக்கிழமை ஸ்ரீ சுக்கிர சாந்தி ஹோமம் நடைபெற்றது. இதில் களத்திர தோஷம் நீங்கவும், நீண்ட ஆயுள், செல்வம், கல்வி மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவும் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஸ்ரீ சுக்கிர பகவானுக்குரிய பூக்கள், திரவியங்கள், மூலிகை பொருட்கள், பழங்கள், வஸ்திரங்கள் சேர்க்கப்பட்டது. மேலும் 24வது நாளான நாளை 24.01.2020 வெள்ளிக்கிழமை ஆயுள் விருத்தி, திருமணத்தடை,உத்தியோகத்தடை, ஆரோக்கியத்தடை, பித்ரு தடை, கிரகத்தடை, வாஸ்துத்தடை, நவக்கிரகத்தடை நீங்கவும் மேலும் பல நன்மைகள் பெறவும் துர்கா ஹோமமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது. இவ்வைபவம் வருகிற 31.12.2020 வரை நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.