9th day of Sri Narasimhar Homam

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், உலக க்ஷேமத்திற்காகவும் சென்ற 26.04.2012 முதல் 25.05.2013 வரை நடைபெற்ற 365 நாள் – 365 யாகம், ஏகோபித்த பக்தர்கள் வேண்டு கோளுக்கிணங்க இரண்டாவது முறையாக 01.01.2020 புதன்கிழமை மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து ஒன்பதாவது நாளான இன்று 09.01.2020 வியாழக்கிழமை ஸ்ரீ நரசிம்மர் ஹோமமும், ஸ்ரீ கூர்ம லக்ஷ்மி நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது. இதில் ருண, ரோக நிவர்த்தி பெறவும், சத்ரு பயம், கெட்ட சக்திகள் விலகவும், உறவினர்களுடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் நீங்கவும், காரிய தடைகள் அகலவும், அனைத்து செயல்களிலும் வெற்றி பெறவும் மற்றும் பல நன்மைகள் பெற பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஸ்ரீ நரசிம்மர் பெருமாளுக்குரிய பூக்கள், திரவியங்கள், நிவேதன பொருட்கள், பழங்கள், வஸ்திரங்கள் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ கூர்ம லக்ஷ்மி நரசிம்மருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் 10வது நாளான நாளை 10.01.2020 வெள்ளிக்கிழமை தம்பதிகள் அன்னோன்யம், கேது தோஷ நிவர்த்தி, ஆயுள் விருத்தி, செல்வ விருத்தி, முற்பிறவி மற்றும் இப்பிறவி கர்மாக்கள் அகல மேலும் பல்வேறு நன்மைகள் பெறவும் ஸ்ரீ சித்ரகுப்த ஹோமமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது. இவ்வைபவம் வருகிற 31.12.2020 வரை நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images