All Devata Homam with powerful samithukal

சக்தி வாய்ந்த சமித்துகளை கொண்டு சகல தேவதா ஹோமம்
வருகிற 23.12.2020 புதன் கிழமை காலை 10 மணிக்கு விவசாய மக்கள் நலன் வேண்டி விவசாயிகள் தினத்தில் இயற்கை வளம் வேண்டியும் செடி கொடிகள் மரங்கள் ஆரோக்கியம் வேண்டியும் சுற்றுப்புற சூழல் பசுமையாக இருக்க வேண்டியும் அனைவரும் அனைத்தும் பெற்று ஆரோக்கியமாகவும்
ஆனந்தமாகவும் ஐஸ்வர்யம் பெற்று வாழவும்,பிணி பீடைகள் ஒழியவும் பல்வேறு சக்தி வாய்ந்த சமித்துகளை கொண்டு தன்வந்த்ரி பீடத்தில் உள்ள
ஸ்ரீ லக்ஷ்மி கணபத, ஸ்ரீ பாரத மாதா
வீரப்ரம்ஹங்காரு, ஸ்ரீ சித்தய்யா ஸ்வாமிகள்,மஹான் ஸ்ரீ குருநானக்
மஹான் புத்தர்பிரான்,பகவான் மஹாவீர்,பகவான் ஸ்ரீ ரமணர்
ஸ்ரீ அகத்தியர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்,மஹான்
குழந்தையானந்த ஸ்வாமிகள்,
பால் முனீஸ்வரர்,ஸ்ரீ மஞ்சமாதா
ஏகரூப ராகு கேது,ஸ்வாமிகளின் பெற்றோர் ஆலயம,ஸ்ரீ
நவகன்னிகைகள்,அத்ரி பாதம்
ஸ்ரீ அனுசுயாதேவி,ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி,மஹான் வள்ளலார்,ஷீரடி தங்கபாபா
காஞ்சி ஜகத்குரு , மகா பெரியவர்
மஹான் ஸ்ரீ ராகவேந்திரர்,
சூரிய பாபா,ஸ்தல விருட்சம் புன்னைமரம்,பாபா தொனி
துளசி பிருந்தவன்,ஸ்ரீ லக்ஷ்மி வராஹர்.ஸ்ரீ விநாயகர் தன்வந்திரி
ஸ்ரீ தன்வந்திரி விநாயகர்,ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரர்
ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத தரம்சாஸ்தா
பாதாள ஸ்வர்ண சனீஸ்வரர்
(தங்க சனீஸ்வரர்)
ஸ்ரீ சப்த மாதர்கள்
24 மணி நேர அணையா
யாக குண்டம்
யக்ஞ ஸ்வரூபிணி ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவி
ஸ்ரீ வாஸ்து பகவான்
அஷ்ட திக் பாலகர்கள்
பஞ்சபூதங்கள்
பஞ்சமுக வராஹி (காளி,சூலினி, வராஹி, பகுளாமுகி, திரிபுர பைரவி)
ஸ்ரீ மஹிஷாசுர
மர்த்தினி
ஸ்ரீ சரபேஸ்வரர்
ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி
அஷ்ட பைரவர்கள் குரோதன பைரவர், சண்ட பைரவர், ருரு பைரவர், உன்மத்த பைரவர், அசதாங்க பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர்
சம்ஹார வைரவர்
மற்றும்
மஹா காலபைரவர்
ஸ்ரீ மரகதேஸ்வரர்
ஸ்ரீ மரகதாம்பிகை
ஸ்வர்ண காலபைரவர்
(ஸ்வர்ணாகர்ஷணபைரவர்)
ஸ்ரீ கார்த்தவீர்யாஜ் ஜூனர்
ஸ்ரீ சுதர்சன பெருமாள்
ஸ்ரீ பட்டாபிஷேக ராமர்
ஸ்ரீ ஆரோக்கிய லட்சுமி
கெஜ லட்சுமி
ஸ்ரீ சத்ய நாராயண பெருமாள்
468 சித்தர்கள் சிவலிங்க ரூபம்
மாதா தங்க அன்னபூரணி
ஸ்ரீ கார்த்திகை குமரன்
ஸ்ரீ காயத்ரி தேவி
ஸ்ரீ தத்தாத்ரேயர்
ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர்
ஸ்ரீ வேதாந்தா தேசிகர்
ஸ்ரீ ஐயப்பன்
ஸ்ரீ சரஸ்வதி தேவி
ஸ்ரீ லக்ஷ்மி குபேரர்
அஷ்ட நாக கருடன்
ஸ்ரீ நவநீத கிருஷ்ணர்
ஸ்ரீ பாதம்
ஸ்ரீ தன்வந்திரி பெருமாள்
மஹா அவதார் பாபா
கல்யாண ஸ்ரீ நிவாசர்
ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர்
செந்தூர ஆஞ்சநேயர்
போன்ற ரிஷிகள், மகான்கள், சித்தர்கள், முனிவர்கள்,இயற்கை தாவரங்கள், சைவம், வைணவம், சாக்த, சௌரம்,கௌமாரம்,காண பத்தியம், போன்ற ஆறு மதத்திற்கு உரிய தெய்வங்களை வேண்டி இயற்கை வளம், விவசாய மக்களின் நலன் வேண்டி
சகல தேவதா ஹோமம் சக்தி வாய்ந்த சமித்துகளை கொண்டு
நடை பெறுகிறது
 
சமித்துகளும் பலன்களும் அதற்கான தெய்வங்களும் ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் குச்சிகள்.ஒவ்வொரு சமித்து குச்சிக்கும் ஒவ்வொரு வேண்டுதல்களும் பலன்களும் உள்ளன. சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமான வில்வம் சமித்து நாராயணனுக்கு பிடித்த துளசி சுக்கிரனுக்கு பிடித்த அத்தி சமித்து புதனுக்குப் பிடித்த நாயுருவி சமித்து
சந்திரனுக்குப் பிடித்த பலா மரசமித்து அதே போன்று அரசரமர சமித்து : குருவிற்குப் பிடித்தது வன்னிமர சமித்து : சனீஸ்வரனுக்குப் பிடித்தது அருகம் புல் : விநாயகருக்கும், ராகுவுக்கும் பிடித்தது மாமர சமித்து : சர்வ மங்களங்களையும் சித்திக்கும் பாலுள்ள மரத்தின் சமித்துக்கள் : வியாதி நாசினி தாமரை புஷ்பம் : லஷ்மிக்கும் சரஸ்வதிக்கும் பிடித்தமானது மாதுளை மரம் : அழகான் வடிவமும்,வசீகரமும் கிடைக்கும்.
 
சமித்து குச்சிகளும் பலன்களும்:
அத்திக் குச்சி : மக்கட்பேறு.
நாயுருவி குச்சி : மகாலட்சுமி கடாட்சம்
எருக்கன் குச்சி : எதிரிகள் இல்லாத நிலை
அரசங் குச்சி : அரசாங்க நன்மை
கருங்காலிக் கட்டை: ஏவல் ,பில்லி ,
சூனியம் அகலும் .
வன்னி சமித்து : கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும்.
புரசங் குச்சி : குழந்தைகளின் கல்வி வளர்ச்சி
வில்வக் குச்சி : செல்வம் சேரும்
அருகம்புல் : விஷபயம் நீங்கும்.
ஆலங்குச்சி
புகழை சேர்க்கும்.
நொச்சி : காரியத்தடை விலகும்.
 
வில்வ சமித்தினை
கொண்டு ஹோமம் செய்தால் ராஜ யோகம் கிட்டும். வில்வப்பழ ஹோமத்தால் சக்தி செல்வங்களையும் பெறலாம். சிவசக்தி சம்பந்தமான சண்டி ஹோமம் போன்ற யாகங்களில் வில்வம் சமித்தாகப் பயன்படுத்தினால் பலன்கள் நிறைய உண்டு.
துளசி : துளசி சமித்தினால் ஹோமம் செய்தால் நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி நடைபெறும். எண்ணிய காரியம் கைகூடும்.
சோமவல்லிக் கொடி : கொடிக்கள்ளி எனப்படும் இதன் ரசத்தைப் பிழிந்து
’சோமாம்ருதம்’ ம்ருத்யுஜய மந்திரத்தினால் ஹோமம் செய்தால் சகல நோய்களும் நீங்கி, தேகத்தில் அமிர்தம் உண்டாகி பிரம்மதேஜஸ் பெறலாம். கொடியை கணுக்கள் தோறும் ஒடித்து பாலில் தோய்த்து சூர்ய மந்திரம் கூறி அக்னியிடம் இட வேண்டும். இதனால் காச நோய் அகலும்.
பலாசு சமித்து
சந்திர கிரக சமித்தாகும். இதனால் சந்திரகிரக பிரீதியாகும். பலாசு புஷ்பத்தால் எல்லா இஷ்ட காரியங்களும், பலாசு ரஸத்தால் ஞான விருத்தியும், சிறந்த புத்தியும் பெறலாம். பலாசு குச்சிகளை அக்னி ஹோத்திரம் செ¢ய்து அதனால் ஸ்நாபானம் செய்யின் ப்ரம்ம ஞானம் அடைந்து பரப்பிரம்ம சொரூபம் அடையலாம்.
அரசு சமித்து
அரசு சமித்து
குரு கிரகத்தின் சமித்தாகும்.
அரச மரத்தின் சமித்தால் தலைமைப் பதவி வரும்.
போரில் ஜெயம் அடைந்து அரச தன்மை கிடைக்கும்.
வெள்ளை எருக்கு : இது சூரிய கிரகத்தின் சமித்தாகும். இம்மூலிகை சர்வசக்தி பொருந்தியது. வசியம், மோகனம் ஆகிய அஷ்டாமித்துகளும் அடையலாம். இச்சமித்துகளால் ராஜ வசியம்,
ஸ்திரீ வசியம்,
மிருக வசியம்,
சர்ப்ப வசியம், லோக வசியம், சத்ரு வசியம், தேவ வசியம்
ஆக சர்வ வசியங்களையும் அடையலாம்.
எடுத்த வேலை இனிதே முடியும்.
செம்மர சமித்து
இது அங்காரக கிரக சமித்தாகும். இதனால் ரண ரோகங்கள் நீங்கும். தைரியம் பெருகும்.
நாயுருவி சமித்து : இது புது கிரக சமித்தாகும். இதனால் லட்சுமி சுடாட்சம் ஏற்படும். சுதர்சன ஹோமத்திற்கு இதுவே சிறந்தது.
அத்தி சமித்து
இது சுக்கிர கிரகத்தின் சமித்தாகும்.
பித்ரு ப்ரீதி பெற்று விரும்பிய பொருள் கைகூடும். பில்லி, சூனியம், பிசாசு பயங்களிலிருந்து விடுவித்து சத்ருக்களை வெல்லும். பைத்தியமும்
மேக ரோகங்களும் அகலும். வாக்கு சித்தியும் ஏற்படும். பசு, யானை, குதிரை நோய் நீங்கும்.
வன்னி சமித்து : வன்னி சமித்து
சனிக் கிரகத்தின் சமித்தாகும்.
இதில் அக்னிப் பகவான் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.
வன்னி சமித்து யாக பஸ்மாவைத் தரித்தால்
அது நெற்றியில் எழுதியிருக்கும்
யம சம்பந்தமான எழுத்தைத் தொலைத்து விடும். இந்த சமித்து பஸ்பம் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் மூவுலகினையும் மூன்று அக்னிகளையும் முக்குணங்களையும் குறிப்பதாக இருக்கிறது.
சகல தெய்வ, தேவாதி களும் இச்சமித்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள். பூகம்பங்களால் உண்டாகிற பயங்கள் நீங்கும். சகல தோஷங் களும் நிவர்த்தியாகும்.
தர்ப்பை சமித்து : கேது பகவானுக்கு தர்ப்பை சமித்து மிகவும் பிடித்தமானதாகும். இது ஞான விருத்தியைத் தரும்.
அருகம்புல் : இது ராகு பகவானுக்குப் பிடித்தமானது. இதனால் பூர்வ ஜென்ம வினைகளும் சர்வ இடையூறுகளும் நீங்கி காரியம் சித்தியடையும். கீர்த்தியும், புகழும் பெறலாம். அறிவும், அழகும், வசீகரமும் உண்டாகும். கணபதி ஹோமத்தில் இதைப் பயன்படுத்துவார்கள்.
கரும்பு : கரும்புத் துண்டுகளையாவது அல்லது கரும்பு சார் கொண்டு ஹோமம் செய்தால் வரனுக்கு விரும்பிய கன்னிகையும், கன்னிகைக்கு விரும்பிய வரனும் கிடைப்பர்.
ஆலசமித்து : இது ம்ருத்யஞ்சய வேள்வியின் முக்கிய சமித்து. யமனுக்குப் பிடித்தமானது. இதனால் நோய்கள் நீங்கும். ஆயுள் நீடிக்கும்.
எள் : ஹோமத்தில் எள் போட்டு யாகம் செய்ய பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும். தீராத கடன் தொல்லை தீரும்.
புங்க மரம் : இதன் சமித்து வெற்றியைத் தரும்.
இலந்தை : இந்த சமித்தினால் ஹோமம் செய்ய குடும்பம் இனிது
வாழ வழி உண்டாகும்.
தேவதாரு :
இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல தெய்வங்களும் வேண்டிய வரங்களைக் கொடுப்பார்கள்.
வல்லாரைக் கொடி : இதை ஆகுதி செய்தால் கல்வி சிறப்பாக வரும். ஞாபக சக்தி அதிகரிக்கும் சரஸ்வதி கடாட்சமும் ஏற்படுத்தும்.
சந்தன மரம்
இதன் சமித்தால் ஹோமம் செய்தால் மூதேவி முதலிய
சகல பீடைகளையும் விலக்கி லட்சுமி கடாட்சம் ஏற்படும். சகல சம்பத்துடன் வாழ்வார்கள்.
வேங்கை மரம்
இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் பில்லி சூன்யம், ஏவல், பிசாசு, பயம் ஓழியும்.
மகிழம்பூ : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல துக்கங்களும் நிவர்த்தியடைந்து சிக்கல்கள் அனைத்தும் தீரும். மனம் அமைதி பெறும்.
பூவரசு : இந்த சமித்து பூலோக அரச மரம் என்று வழங்கப்படுகிறது. அரசு சமித்து இல்லாத குறையை இந்த சமித் அரசு சமித்தினால் செய்யப்படும் ஹோமம் தரும் பலன் இதற்கும் உண்டு.
நவதானியங்கள் : அந்தந்த கிரகங்களுக்குரிய தானியத்தால் நவக்கிரக ஹோமம் செய்தால் கிரக தோஷங்கள் விலகும். சுபிட்சம் நிலவும்.
மஞ்சள் : முழு மஞ்சள் சகல வியாதிகளை நீக்கும். அதோடு கல்வியும், செல்வமும் தரும்.நெல்லி ஆரோக்கியத்தை மீட்டு தரும். நெருஞ்சி
சிறுநீரகத்தை
சீர் செய்யும் கடுக்காய் விஷ நோய் நிவர்த்தி. கருங்காலி பயம் போக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த சமித்துக்களை கொண்டு சகல தேவதா ஹோமம் வாலாஜா தன்வந்த்ரி பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருள் ஆணைப்படி இயற்கையை கொண்டு இறைவனை வழிபட்டு இயற்கை வளம்பெற
நடைபெற உள்ளது.
94433 30203

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images