அட்சய திருதியை நாளில் உயிர் பிழைக்க ஆக்சிஜன் வேண்டி உள்ளவர்களுக்கு
உதவிகள் புரிவோம்,அழகாபுரி, குபேரபுரி, ஐஸ்வர்யபுரி, ஆரோக்கியபுரி சம்பத்துபுரி,
ஸ்வர்ணபுரி, சௌபாக்யபுரி என்று பல்வேறு வகையான பெயர்களில் பக்தர்கள்
அழைத்து மகிழும் இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தன்வந்த்ரி பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி குபேர கோவிலில் நாளை 14.05.2021, வெள்ளிக்கிழமை
அட்சய திருதியை முன்னிட்டு சாம்ராஜ்ய லட்சுமி ஹோமம்,ஸ்வர்ண ஆகர்ஷ்ண பைரவர் ஹோமம், ஸ்ரீ மஹா லக்ஷ்மி ஹோமம் மற்றும் லக்ஷம் காசுகள் கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
சோளிங்கர் வாலாஜா சாலையில் கிழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ மகாலட்சுமி குபேரன் கோவிலில், அட்சய திருதியை தினத்தை யொட்டி, இன்று (13 ம் தேதி) மாலை 4.00 மணிக்கு மகா சங்கல்பம், லக்ஷ்மி குபேரர் குங்கும அர்ச்சனை ஸ்வர்ண பைரவர் சிறப்பு அபிஷேகம் நடைபெறும் நாளை (14 ம் தேதி) காலை 7:00 மணிக்கு கோ பூஜை,
7.30 மணிக்கு புண்ணியாவாகனம். மேலும் நோய்கள் நீங்கவும், ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி
அருள் பெறவும் ,சுப நிகழ்ச்சிகள் பெறவும் மஹாலக்ஷ்மி, ஸ்வர்ண பைரவர் சாம்ராஜ்ய லக்ஷ்மி மூலமந்திர ஹோமம் நடைபெற்று 10 மணிக்கு மகா பூர்ணாஹூதி, 10.30 மணிக்கு லக்ஷ்மி குபேரருக்கு மஹா திருமஞ்சனம். 1100 மணிக்கு சிறப்பு அலங்கார மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து லக்ஷ்மி குபேரருக்கு லக்ஷம் காசுகள், வில்வ இலைகள், தாமரை மலர்கள், தாழம்பூ குங்குமம், மஞ்சள் கிழங்கு, தாமரை மணிகள் கொண்டு சிறப்பு வழிபாடுகள் அரசு வழிகாட்டுதல் படி நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர். இந்த நாளில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், ராஜ தேவியாக விளங்கும் சாம்ராஜ்ய லக்ஷ்மியை வணங்கினால், வறுமை நீங்கும், குறையாத செல்வம் சேரும் என்பது நிச்சயம் என்கிறார்கள். நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் தன்வந்த்ரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.
இந்த புனிதமான நாளில் உயிர் பிழைக்க ஆக்சிஜன் வேண்டி உள்ளவர்களுக்கு உதவி செய்யலாம்.அன்னதானம், வஸ்திரதானம் மருத்துவ உதவி, கல்வி உதவி போன்ற பலவிதமான தான தர்மங்களை அட்சய திருதியை நாளில் செய்து குபேர பகவானின்
அருளுக்கு பாத்திரதரார் ஆகலாம்.. ஹோமத்தில் பங்கேற்பவர்களுக்கு, குபேர யந்திரம்,
குபேர காசு, குபேர ரக்ஷை, குபேர குங்குமம், அட்சதை பிரசாதங்கள் கூரியர் மூலம் அனுப்பி வைக்கபடும் சங்கல்பம் செய்ய தொடர்புக்கு
94433 30203.