Crore Yagam To Eradicate The Corona

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டை கிராமத்தில் உள்ள தன்வந்திரி பீடத்தில் கோரோன நோயின் பயம் நீங்கவும், வராமல் தடுக்கவும்,பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் குணம் அடையவும், விஷ கிருமிகள், ஒழியவும்,மக்கள் உடல் ஆரோக்கியத்தில் மேம்படவும், சர்வசத்ரு பயம் நீங்கவும்,
46 லக்ஷம் பக்தர்கள் கைப்பட எழுதிய 54 கோடி தன்வந்திரி மஹா மந்திரங்கள் கொண்டு அமைந்துள்ள காக்கும் கடவுளும், சர்வரோக நிவாரண பெருமாளும் உலக மகா மருத்துவருமான ஸ்ரீ ஆரோக்கிய லஷ்மி சமேத தன்வந்திரிபகவானை
வேண்டி வருகிற 24.03.2021 புதன் கிழமை முதல் 24.06.2021, வியாழக்கிழமை வரை கோடி ஜப சுதர்சன தன்வந்திரி மஹா யக்ஞம். வாலாஜா தன்வந்த்ரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள 86 பரிவார தெய்வங்களை பிரார்த்தித்து ஸ்தாபகர் பீடாதிபதி Dr.ஸ்ரீ.முரளிதரஸ்வாமிகள் ஆசிகளுடன் நடைபெற உள்ளது. கூடி பிரார்த்திக்க
ஓடி வாருங்கள் சீந்தில் கொடி, கடுக்காய், வெண்கடுகு,ஜாதிக்காய், வலம்புரி, இடம்புரி, நெல்லிக்காய், கருங்காலி, குங்குலியம், நவதானியங்கள் பற்படாகம், போன்ற 100 மேற்பட்ட ராஜமூலிகை, நவமூலிகை கொண்டு 93 நாட்கள் ஆயுள் காக்கும் அற்புத ஹோமங்கள் நடைபெற உள்ளது ஏகாதசி முதல் குரு பூர்ணிமா நாள் வரை நடை பெறுகிறது காலை மாலை இரு வேலையும் நடைபெறும்

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images