Dasha Bhairavar Yagam for Theipirai Ashtami

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று 19.12.2019 வியாழக்கிழமை மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை தச பைரவர் யாகத்துடன் அஷ்ட பைரவர் சகித மஹா காலபைரவர் மற்றும் சொர்ணாம்பிகை சமேத சொர்ணாகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான ஓம்சக்தி பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். இப்பூஜைக்கு திருவலம் திரு.சத்யா குடும்பத்தினர்கள் கைங்கர்யம் செய்து கலந்து கொண்டு சிறப்பித்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images