Dhrishty Durga Homam with Soolini Durga Homam 2019

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் அமாவாசையை முன்னிட்டு வருகிற02.07.2019 செவ்வாய்கிழமை காலை 11.30 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை திருஷ்டி துர்கா ஹோமத்துடன் சூலினி துர்கா ஹோமம் நடைபெற்றது.

திருஷ்டி தோஷத்தினால் ஏற்படும் வியாதி, பணப் பிரச்னை, வேலை இல்லாமல் இருப்பது, கணவன் –மனைவிக்குள் பிரச்னை, சொத்துப் பிரச்னை, நேர்மையாகக் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் இருப்பது,குடும்பத்துக்குள் தகராறு போன்ற பல பிரச்னைகள் நிவர்த்தியாக மேலும் பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றுவதற்கும், கோபத்தைக் குறைப்பதற்கும், ஜாதகரீதியிலான தோஷங்களைக் களைவதற்கும்,கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்களுக்கு பரிகாரமாகவும், மாத்ரு – பித்ரு தோஷம் அகலுவதற்கும், கெட்ட சகவாசங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கும், விஷ ஜந்துக்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கும், சூலினி துர்கா ஹோமமும் நடைபெற்றது.

இயற்கைச் சீற்றங்கள் குறையவும், மழை வேண்டியும், சகல வளங்களையும் பெறவும், தொழில், உத்யோக அபிவிருத்தி, வழக்குகளில் வெற்றி போன்ற பல்வேறு நன்மைகளுக்காக கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

இந்த யாகங்களில் மிளகாய் வற்றல், வேப்ப எண்ணெய், கடுகு, வெண் கடுகு, நாயுருவி, சிகப்பு அரளி, 108மூலிகைகள், கல் உப்பு, எலுமிச்சை சாதம், புளி சாதம், சர்க்கரை பொங்கல், இனிப்பு மற்றும் கார வகைகள், சிகப்பு குங்குமம், மஞ்சள், 108 முறம், 108 வெள்ளை பூசணிக்காய் போன்ற பல்வேறு விசேஷ திரவியங்கள் சேர்க்கப்பட்டது.

இவ்வைபவங்களில் ஆந்திரா குண்டூர் தொழிலதிபர் திரு.T.உமாசங்கர் குடும்பத்தினர் மற்றும் ஏராளமானவர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இறைப்பிரசாதம் வழங்கி ஆசிர்வதித்தார். இதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images