Hanumantha Homam with Sri Sanjeevi Anjaneyar Special Abishegam

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 03.03.2020 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள சஞ்சலம் தீர்க்கும் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு ஹனுமந்த ஹோமத்துடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதில் நெய், தேன், மூலிகைகள், நவதானியங்கள், புஷ்பங்கள், பழங்கள், சமித்துகள், வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், சந்தனம், பஞ்சாமிருதம், திரவியப்பொடி, பன்னீர் போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரமும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images