Lakshmi Varahar Homam 2019

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீகயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் உலக மக்கள் நலன் கருதி இன்று 30.06.2019ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை ஸ்ரீ லக்ஷ்மி வராஹர் ஹோமமும், சிறப்புதிருமஞ்சனமும், ஆராதனைகளும் நடைபெற்றது.

ஸ்ரீ லக்ஷ்மி வராஹ பெருமாளை வேன்டி நடைபெற்ற இப்பூஜைகளிலும் ஹோமத்திலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ராகு தோஷங்கள் நீங்கும், பூமி சம்பந்தமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் நல்ல பலன்களை அடையவும், சனிதசை, சனி தோஷ சங்கடங்களிலிருந்து விடுபட்டு சுகம் பெறவும், திருமணத்தடைகள் நீங்கவும், பயம், வியாதி, துர்பிஷங்கள் தொலைந்து, அறிவும் செல்வமும் உண்டாகவும், வாழ்வில் என்றும் சுகம் பெறவும், காரியங்களில் வெற்றி கிடைக்கவும், சத்ரு உபாதைகள் அகலவும் போன்ற பல்வேறு நன்மைகள் ஏற்பட கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது.

மேலும் இவ்வைபவங்களில் பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images