Maha Ganapati Homam

ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் வருகிற24.06.2020 முதல் 1.10.2020 வரை 100 நாட்கள் உலக நலன் கருதி தன்வந்திரி கோடி நாம அர்ச்சனை - தன்வந்திரி ஹோமம் திருமஞ்சனம் நடைபெறுவதை முன்னிட்டு 17.06.2020 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு மேற்கண்ட ஹோமங்கள் தங்க தடையின்றி நடைபெறவும், கர்ம வினைகள், ஊர் வினைகள் அகலவும், சகல காரியங்களில் வெற்றி பெறவும் மகா கணபதி ஹோமமும், தன்வந்திரி விநாயகருக்கு அபிஷேகமும் நடைபெற உள்ளது. வீட்டில் இருந்தவாரே சங்கல்பத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் பெயர் விவரங்களை பதிவு செய்து பலன் பெறலாம்.

அரசு பிறப்பித்துள்ள பொது ஊரடங்கை முன்னிட்டு மேற்கண்ட பூஜைகளிலும் ஹோமங்களிலும் பொது மக்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதி இல்லை. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images