Naalum Nanmai Tharum Navagraha Homangal

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி மண்ணில் பிறந்த மனிதர்களுக்கு ஏற்படும் பலவகையான தோஷங்களுக்கு பரிகாரமாக வருகிற 17.06.2017 மற்றும் 18.06.2017 சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் காலை 10.00 மணியளவில் நன்மை தரும் நவகிரக ஹோமங்கள் நடைபெற உள்ளது.

மனித வாழ்வை ஒளி மயமாகவும், பிரகாசமாகவும் வாழ செய்யப்படுவது தான் பரிகாரங்கள் மற்றும் யாகங்கள் ஆகும். ஒரு மனிதன் தனது வாழ்வை அவரவர் தீர்மானிப்பதில்லை. அதனை தீர்மானிப்பது அவர்கள் பிறக்கும் போது அப்போது உள்ள நவகிரகங்கள் மற்றும் அந்த நவகிரகங்கள் அவர்களின் ஜாதகத்தில் இருப்பது. மேலும் அந்த ஜாதகங்களின் வீரியமும் தான் ஒவ்வொருவரின் விதிகளை முடிவு செய்கிறது

இந்த நவகிரகங்களின் அமைப்பால் அவர்களுக்கு நல்லது அல்லது தீமைகள் நடக்கின்றன. ஒரு மனிதனின் பிறப்பானது ஏழு பிறவி என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். மேலும் நமது இந்து சாஸ்திரங்கள் கூறுவதாவது ஒருவர் முன் பிறப்புக்களில் செய்த நல்வினைகளால் இந்த பிறவியில் நல்ல காரியங்களும், முன் பிறவியில் செய்த தீய செயல்களால் இந்த பிறவியில் தோஷங்களாகவும் அவரவர் ஜாதகத்தில் வந்தடையும் என்பதாகும்.

தோஷங்கள் பல வகைப்படும்.. அவைகளில் மிக முக்கியமானது செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம், குடும்ப தோஷம் எனலாம். செவ்வாய் தோஷம்: இந்த தோஷத்தினால் விவாகம் மிகவும் தடைபடும்.. அப்படி நடந்தாளும் கணவன் மனைவி இருவரில் அடிக்கடி சண்டைச்சரவுகள்ஏற்படும். களத்திர தோஷம்: இந்த தோஷமும் செவ்வாய் தோஷம் போல திருமணம் நடக்க சில சிக்கல்கள் வரும். மேலும் திருமணம் நடந்த பின் அதிகமாக சண்டை வந்து திருமண பந்தம் முடிவுக்கு வரும் என்ற நிலைமைக்கு கொண்டு செல்லும்.புத்திர தோஷம்: இந்த தோஷத்தில் குழந்தைகள் திருமணம் ஆனவுடன் பிறக்காமல் மிகவும் கால தாமதம் ஆகும். அப்படியே குழந்தை பிறந்தாலும் நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறக்காமல் பெற்றோர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களின் மன நிம்மதியை கெடுக்கும் குழந்தையாக பிறக்கும்.குடும்ப தோஷம்: இந்த வகை தோஷத்தில் திருமணம் விரைவில் நடந்தேறி, விரைவில் குழந்தை பேறு அடைவர். ஆனால் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியான வாழ்கை இல்லாமல் குடும்பத்தில் அடிக்கடி சண்டை, புத்திரகளால் மகிழ்ச்சி இன்மை, சிலருக்கு குடும்பமே பிரிவு ஏற்பட்டு மணமுறிவு ஏற்படும். மனை தோஷம்: மேற்சொன்ன தோஷத்தை தவிர மிக முக்கியமானது மனை தோஷம். இந்த தோஷம் உள்ளவர்கள் வீடு எளிதில் வாங்க இயலாது. மேலும் இந்த தோஷத்தால் வீட்டில் அடிக்கடி சண்டை நிகழும் பிறகு அடிக்கடி விபத்துக்கள் நடக்கும். காரணமில்லாத நோய் தாக்கும். வீண் செலவு அதிகரிக்கும்.. மருத்துவ செலவு அதிகமாகும். தூக்கம் வராது. கெட்டநிகழ்ச்சி,துர் சொப்பனம் அடிக்கடி வரும்.

மற்ற தோஷங்கள்: வாழ்வில் இந்த தோஷம் மட்டும் அல்லது பிரேத தோஷம், குலதெய்வ தோஷம், மாந்தி தோஷம், காகவந்திய தோஷம், பிரம்மஹத்தி தோஷம், காலசர்ப்ப தோஷம், நாக தோஷம், பிதுர் தோஷம், பிராமண தோஷம், கர்ம தோஷம், பாவ காயத்ரி தோஷம், வாக்கு தோஷம், பைத்திய தோஷம், செய்வினை தோஷம், ஆயுள் தோஷம், பூர்வீக தோஷம் ஆகியவை மனிதனின் ஜாதகத்தில் உள்ள அதிகமான தோஷம் ஆகும்.இந்த தோஷங்கள் அனைத்தும் முந்தைய பிறவியில் அவரவர் செய்த பாவம், புண்ணியத்தினை முன்னிட்டு ஏற்படக்கூடியவை. இவற்றை போக்க ஒரே வழி பரிகாரங்கள் மற்றும் ஹோமங்கள் மட்டுமே. இதனை செய்வதன் மூலம் நாம் முன் பிறவியில் செய்த பாவங்களை போக்கி கொள்ளலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்..

ஹோமங்களின் பலன்கள்:ஒவ்வொருவரும் அவர்கள் முந்தைய பிறவியில் செய்த பாவங்களை போக்க ஹோமம் நிகழ்த்தப்படுபவையாகும். யாகங்கள் மனிதர்கள் மட்டுமின்றி தெய்வங்களும் , அரசர்களும், சித்தர்களும் கூட ஹோமங்களை செய்துள்ளனர். இன்றும் பலர் ஹோமங்களை செய்து வாழ்வில் வெற்றி பெறுவதை கண்கூட காண்கிறோம்.இத்தகைய தோஷங்களை போக்கவும் அனைவரும் ஆரோக்யத்துடன் வாழவும் பலவிதமான நன்மைகள் பெறவும் மேற்கண்ட நவகிரக ஹோமம் நடைபெற உள்ளது.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images