Nava Bhairavar Yagam 2019

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் இன்று 28.03.2019 வியாழக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சொர்ண பைரவர் யாகமும் தொடர்ந்து தச பைரவர் யாகத்துடன் பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள அஷ்ட பைரவர் சகித மஹா காலபைரவருக்கு அபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.அபிஷேகங்களும், 1008 அர்ச்சனையும், சதுர் வேதபாராயணமும், உபசார பூஜைகளுடன் மஹா மங்கள ஆரத்தியும் நடைபெற்றது.

இப்பூஜையில் 12 ராசிகாரர்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்கவும், நினைத்த காரியங்கள் விரைவில் தடையில்லாமல் நிறைவேறவும், தொழில் ரீதியாக வெளிநாடு சென்று வாழும் பக்தர்களுக்கு ஏற்படும் தடைகள் நீங்கவும், வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி பெறவும், நவக்கிரகங்களால் ஏற்படும் சோதனைகள் அகலவும், போன்ற பல்வேறு காரணங்களுக்காக பிரார்த்தனை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து பூசணிக்காய், சிவப்பு அரளி, உளர் திரக்ஷை பழங்கள், மூலிகைகள், அபிஷேக திரவியங்கள்,நெய், மிளகு, நல்லெண்ணை, எலுமிச்சம் பழம், பழங்கள், மாதுளம் பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள், யாகத்தில் சேர்க்கபட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images