Nigumpala Yagam and Swarna Kala Bhairavar Yagam 2019

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் அமாவாசை மற்றும் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு இன்று 28.09.2019 சனிக்கிழமை ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், நிகும்பலா யாகத்துடன் சொர்ண கால பைரவர் யாகம், ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி, ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர், ஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.

இதில் பிரபல ஜோதிடர் கோயம்பத்தூர் திரு. ஆனந்தவேல், பெங்களூர் திரு. சதிஷ் குடும்பத்தினர்கள், திருவலம் திரு.சத்தியா, சென்னை டாக்டர் திரு. ரங்கராஜன், மற்றும் ஏராளமானவர் பங்கேற்றனர்.

இதில் நெய், தேன், நவசமித்துகள், விசேஷ பழங்கள், புஷ்பங்கள், மிளகாய், மஞ்சள், குங்குமம், வெண்கடுகு, மூலிகைகள், பலகாரங்கள், நிவேதன பொருட்கள், மேலும் பல திரவியங்கள் சேர்க்கபட்டு மஹா பூர்ணாஹுதியானது நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதம் வழங்கபட்டது. இதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images