Raghavendrar 346th Aradhanai

குரு ராகவேந்திரர் சுலோகம்
பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே

ஸ்ரீ குரு ராகவேந்திரரருக்கு வேலூர் மாவட்டம், வாலஜாபேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், உலகில் வேறெங்கும் இல்லாதவாறு 4 அடி உயரத்தில் ம்ருத்திகா பிருந்தாவனத்தில் காமதேனுவுடன் மார்பில் ராமரும், பிருந்தாவனத்தில் லட்சுமி நரசிம்மருடன் வடிவமைக்கப்பட்டு தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களில் கரிகோல பவயாக கொண்டு செல்லப்பட்டு மிகவும் பிரசித்தி பெற்ற ம்ருத்திகா பிருந்தாவனங்களில் வைத்து பூஜிக்கப்பட்டு பக்தர்களால் ஆராதனை செய்யப்பட்டு அங்குள்ள (51 பிருந்தாவனங்கள்) ம்ருத்திகளை கொண்டு வந்து, தன்வந்திரி பீடத்தில் தன்வந்திரி மஹா மந்திரத்துடன் மத்துவாச்சாரியர்களைக் கொண்டு விசேஷமான முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

நாளை 09.08.17 புதன்கிழமை விசேஷ ஆராதனை மஹோத்ஸவ விழா நடைபெற உள்ளது. ராகவேந்திரருக்கே உரிய பஞ்சாமிர்த அபிஷேகமும், நவக்கிரஹ ஹோமங்களும், லட்சுமி பூஜையும் மற்றும் ராயர் ஆராதனையுடன் நடைபெற உள்ளது.

இதில் கலந்துகொள்பவர்களுக்கு அனைத்துவிதமான பிரச்னைகளும் நீங்கி, சகல சம்பத்துடனும், ஆரோக்யத்துடனும் வாழ வழி கிடைக்கும் என்கிறார் நமது கயிலை ஞானகுரு. டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images