Sahala Devada Homam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி உலக மக்கள் நலன் கருதியும், இயற்கை வளத்திற்காகவும் வருகிற06.08.2019 செவ்வாய்கிழமை ஷஷ்டி திதியன்று காலை 8.00 மணிக்கு சகல தேவதா ஹோமம் துவங்க உள்ளது. மேலும் இந்த ஹோமமானது வருகிற 26.08.2019 செவ்வாய்கிழமை ஏகாதசி திதியன்று மஹா பூர்ணாஹுதி நடைபெற்று சிறப்பு ஆராதனைகளுடன் பூர்த்தி பெற உள்ளது.

இந்த சகல தேவதா ஹோமம் தினமும் காலை 8.00 மணி முதல்11.30 வரையும், மாலை 4.00 மணி முதல் 6.00மணி வரையும் நடைபெற உள்ளது. இதில் கோ பூஜை, வேத பாராயணம், திருப்பள்ளி எழுச்சி, காலசந்தி பூஜை, விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமத்துடன் சகல தேவதா ஹோமம் நடைபெற உள்ளது.

இதில் விசேஷ மூலிகைகள், நவ சமித்துக்கள், நவ தானியங்கள், பட்டு வஸ்திரங்கள், நிவேதன பொருட்கள், பழங்கள், புஷ்பங்கள், நெய், தேன், மஞ்சள், குங்குமம், சௌபாக்ய பொருட்கள் போன்றவை சேர்க்கப்பட உள்ளது. பகதர்கள் அனைவரும் இந்த வைபவத்தில் பங்கேற்று சகல தேவதா அனுக்கிரகத்தை பெற்று சகல ஐஸ்வர்யங்களுடன், ஆனந்தம், ஆரோக்யத்துடன் மகிழ்ச்சியான வாழ்வு வாழ் அன்புடன் அழைக்கின்றோம்.

இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images