Shirdi Sai Maharaj Homam September

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “ யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், சீரான வாழ்வு வேண்டியும் புரட்டாசி வியாழக்கிழமையை முன்னிட்டு நாளை 19.09.2019 காலை 10.00 மணி முதல் 12.00மணி வரை சீரடி சாயிபாபா ஹோமமும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற உள்ளது.

குறிப்பக தன்வந்திரி பீடத்தில் வல்லலார், ரமணர், புத்தர், காஞ்சி மஹா பெரியவா, ராகவேந்திரர் போன்ற பல்வேறு குரு மஹான்களை பிரதிஷ்டை செய்து அவர்களுக்குறிய விசேஷ நாட்களில் சிறப்பு ஹோமங்களுடன் பூஜைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள சிரடி தங்க பாபாவிற்கும், சீரடி சூரிய பாபாவிற்கும் ஆவணி வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு ஹோமத்துடன் விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் இதில் பங்கேற்று குருவருள் பெற்று ஆனந்தம், ஆரோக்யம், ஐஸ்வர்யத்துடன் நல்வாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images