Sri Hanuman Jayanthi Vizha and Amavasai Yagam

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று 25ம் தேதி அமாவாசை மற்றும் ஹனுமன் ஜயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஸ்ரீ சுதர்சன ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், ஹனுமந்த் ஹோமம் மற்றும் அமாவாசை யாகம் நடைபெற்றது.தொடர்ந்து ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சனேயருக்கும் செந்தூர ஆஞ்சனேயருக்கும் பால்,பன்னீர்,நெல்லிப்பொடி,சந் தனம்,மஞ்சள் போன்ற விசேஷ திரவியங்களை கொண்டு அபிஷேகமும் , வெண்ணை, வடை மாலை, துளசி மாலை, பழமாலை, வெற்றிலை மாலை, எலுமிச்சம் பழம் மாலை மற்றும் புஷ்ப மாலை சார்த்தி சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது.

இதில் அனைவருக்கும் சகல மங்கலங்களும் உண்டாகவும்,நவகிரக தோஷங்கள் விலகவும், நினைத்த காரியம் கைகூடவும், துன்பம் விலகவும், குடும்பத்தில் இன்பம் பெருகவும் கூட்டு பிரார்த்தனை நடைப்பெற்றது தொடர்ந்து வருகை புரிந்த பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதமும் வழங்கப்பட்டதுஇதில் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அணையர் டாக்டர்.நந்தகோபால் தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷித் துணைத்தலைவர் திரு.துளசிராம் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .இந்த தகவலை ஸ்தாபகர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images