The Yagam for child boon

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி இன்று புதன் கிழமை 03.01.2018 காலை 10..00 மணி முதல் 1.00 மணி வரை குழந்தை பாக்கியம் பெற வேண்டி சந்தான கோபால யாகம் மற்றும் ஆண்கள் திருமணத் தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமமும் பெண்கள் திருமணத் தடை நீங்க சுயம்வரகலா பார்வதி யாகமும் நடைபெற்றது.

சந்தான கோபால யாகம்

பெண்கள் கருத்தடை பிரச்சனைகள் நீங்கவும், குழந்தை பிறக்கத் தடையாக உள்ள நாகதோஷம் மற்றும் கர்ம பிரச்சினைகள் இருந்து மீட்கவும், கர்ப்ப பிரச்சினைகள், ஜாதக கிரகங்களின் எதிர்மறை விளைவுகளை அகற்றவும் செய்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பெற்றெடுக்கும் போது ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைக்கவும் இந்த ஹோமம் நடைபெற்றது. இதில் கணவன் மனைவி இர்வரும் கலந்துகொண்டு நவநீத கிருஷ்ணருக்கு வெண்ணைக் காப்பு சார்த்தி குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images