To The Life-Giving Varahi Special Pooja

வாழ்வு தரும் வராஹிக்கு சிறப்பு பூஜை திருமணத்தடை, குழந்தை பாக்கியம் அருளும் வராகி அம்மன் இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் தனி சன்னதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாவித்து
வருகிறார். சப்த மாதர்களில் முக்கியமாக விளங்கும் வராகி அம்மன் இங்கு பஞ்சமுக வராஹியாக அமைந்து உள்ளாள். இவரை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும் தொழில் வளர்ச்சிபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
 
பிராம்மி, வை‌‌ஷ்ணவி, கவுமாரி, வராகி, இந்திராணி, மாகேஸ்வரி, சாமுண்டி என்ற
சப்த மாதர்களில் ஒருவர் தான் வராஹி திருமாலின் வராக அவதாரத்தின் சக்தி அம்சமான வராகி அம்மன் திருமேனி மட்டும் காசியில் வராகி அம்மனுக்கு எனத் தனி சன்னதி உள்ளது. சப்த மாதர்களில் முக்கியமாக விளங்கும் வராகி அம்மனை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும் மேலும் பல்வேறு நன்மைகள் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். அம்மனின் போர்ப்படை தளபதியாக வராகி அம்மன் உள்ளார். ஆதலால் நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெற நினைப்பவர்கள் இந்த அம்மனை வேண்டினால் கண்டிப்பாக வெற்றி கிட்டுவதுடன்,
கேட்ட வரம் தருவதாகவும் இங்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர்.
 
ராஜராஜசோழன் எந்த செயலை செய்தாலும் முதலில் வராகி அம்மனை வழிபடுவது தான் வழக்கம். தன்வந்த்ரி பீடத்தில் நடைபெறும் ஆ‌ஷாட நவராத்திரி விழா மிகவும் சிறப்பு மிக்கது ஆகும். இந்த நவராத்திரி விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் கலந்து கொள்வர். விழாவையொட்டி அம்மனுக்கு தினமும் பல்வேறு அலங்காரமும், யாகங்களும், சிறப்புப் பூஜைகளும் நடைபெறுவது வழக்கம்.
 
இத்தகைய சிறப்பு வாய்ந்த வராஹிக்கு இன்று 01.05.2021 சனிக்கிழமை மாலை பஞ்சமி திதி முன்னிட்டு வாராஹி ஹோமமும் சிறப்பு அபிஷேகமும் பல்வேறு விதமான நோய்கள் தீரவும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறவும் நடைபெற உள்ளது மேலும் சிறப்பு பிரார்த்தனையும் வாழ்வு தரும் வராஹிக்கு நடைபெற உள்ளது
Ct 94433 30203

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images