Vastu Dosha Pariharam 2019

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி வாஸ்து நாளை முன்னிட்டு இன்று28.10.2019 திங்கள்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும், அஷ்டதிக் பாலகர் பூஜையும், ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.

இந்த யாக பூஜைகளில் நெய்தேன்பால்தாமரை புஷ்பங்கள்பல வர்ண புஷ்பங்கள்மிளகாய் வற்றல்,நவதானியங்கள்மூலிகைகள்நவசமித்துகள்பழங்கள்நிவேதன பொருட்கள் போன்றவை சமர்ப்பிக்கபட்டு மஹாபூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர் போன்ற திரவியங்களால் ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதம் வழங்கினார்.

நாளை குரு பெயர்ச்சி மஹா யாகம்

குரு பெயர்ச்சியை முன்னிட்டு குருப்பெயர்ச்சி யாகமும் சிறப்பு ஆராதனையும் :

குரு பகவான் விருட்சிகம் ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறதை முன்னிட்டு நாளை 29.10.2019செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை குரு பெயர்ச்சி மஹா யாகமும், பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்திக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளது. இதில் ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் மற்றும் குரு திசை, குரு புக்தி நடக்கும் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images