Vinayagar Chathurthi 108 Ganapathi Homam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்அருளானைப்படி விநாயக சதுர்த்தியை முன்னிட்டு இன்று 02.09.2019 திங்கள்கிழமை காலை 10.00 மணியளவில்108 கணபதிகளை வழிபடும் விதமாக 108 கணபதி ஹோமத்துடன் ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு சிறப்பு அபிஷேகமும், சஹஸ்ர நாம அர்ச்சனையும் நடைபெற்றது.

இந்த யாகத்தில் மோதகம், லட்டு, இனிப்பு வகைகள், அருகம்புல், கரும்பு துண்டுகள், நெய், தேன், தாமரை மலர்கள், பழங்கள், புஷ்பங்கள், தும்பை பூ, வஸ்திரங்கள், நிவேதன பொருட்கள் மற்றும் ஏராளமானவை சமர்ப்பிக்கபட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர், பஞ்சாமிருதம், சொர்ண தீர்த்தம், திரவியப்பொடி போன்ற திரவியங்களால் அஷ்ட திரவிய அபிஷேகம் நடைபெற்று நக்ஷத்திர விருட்ச இலைகள் மற்றும் விசேஷ புஷ்பங்களால் சஹஸ்ர நாம அர்ச்சனையும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து பங்கேற்ற பக்தர்களுக்கு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி மோதகமும், பிரசாதங்களும் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images