Yagam

Yagam is said that when Lord Brahmaavu (the creator among the Trinity) created man, he also created "Yajnam" for man's livelihood and his attainment of spiritual desires. 

The fundamental premise of Yajnam is derived from the Vedams, although, according to "Purusha Sooktham", it is the other way around - Vedams originated from Yajnam! Anyhow, Vedams and Yajnam are eternal truths having neither beginning nor end, and are "Apourusheyam" (divine, not the creation of humans). Karmam (work or action) is an integral part of living. 

Right and wrong Karmams can hardly be discerned by human intellect, and has to be guided by knowledge. Vedams, indeed, contain the highest form of knowledge. The singular goal of Vedam is to guide man through the correct path. And Yajnam forms the essence of all the Karmams prescribed in the Vedams.


அஷ்டபைரவருடன் சொர்ணபைரவர் யாகம்

அஷ்டகால பைரவர்

இந்த பிரபஞ்சத்தில் வாழும் ஸகல ஜீவராசிகளும் வான் மண்டலத்தில் சுற்றி சுழன்றுக் கொண்டிருக்கும் நவ கிரகங்களும் காலச்சக்கரத்தின் ஆளுகைக்கு உட்பட்டவை ஆகும். காலச் சக்கரத்தில் சிக்கி துன்புறும் பக்தர்களை காலபைரவர் காப்பாற்றுவதால் ஆபதுத்தாரணர் என்று போற்றி புகழப்படுகிறார். காலத்தின் கட்டுப்பாட்டை கடந்து துன்பப்படும் பக்தர்களுக்கு நன்மை செய்பவர் காலபைரவர் ஆவார். பைரவர் என்ற பதத்திற்கு பயத்தை போக்குபவர் என்று பொருள். அடியார்களுடைய பயத்தை போக்குவதும் அடியார்களின் எதிரிகளுக்கு பயத்தை அளிப்பவரும் இவரது அருள்பாலிக்கும் செயல்களாகும். இவரை வழிபட்டால் வெளிநாடு செல்லும் யோகம் அமையும், சாபம் நீங்கும், எதிரிகள் தொல்லை அகலும், தீராத பிரச்னைகள் தீரும், ஜாதக ரீதியாக ஏற்படும் இன்னல்கள் நீங்கும் என்பது நம்பிக்கையாகும்.

சொர்ணாகர்ஷண பைரவர்

பைரவர் வழிபாட்டில் சிறந்தது சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு. இந்த வழிபாடு செய்வதற்கு தேய்பிறை அஷ்டமி உகந்த நாளாகும். தொழிலில் உள்ள இறங்குமுகம், வாராக்கடன் போன்ற பல இன்னல்கள் நீங்கும். பிரிந்த உறவினர்கள் ஒன்று சேரலாம், தம்பதி ஒற்றுமை நிலைக்கும், உயர் பதவி கிடைக்கும். வேண்டுபவர்களுக்கு வேண்டியவாறு பொன்னையும் பொருளையும் வாரித் தருவார் என்பதால் தான் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் என இவர் அழைக்கப்படுகின்றார். தேய்பிறை அஷ்டமியில் வழிபடத் துவங்கினாலே உங்களது பொருளாதார வளர்ச்சியை அடுத்த சில நாட்களில் உணரலாம். நமக்கு நியாயமாக வரவேண்டிய பணம் வந்துசேரும். சிரத்தையான உண்மையான வழிபாடு மூலம் பலனை உடனே அடையலாம். ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதி தேய்பிறை அஷ்டமி தினத்தன்று காலை சொர்ணாகர்ஷ்ண பைரவர் யாகமும், மாலை அஷ்டபைரவர் ஸகித காலபைரவர் யாகமும் நடைபெறுகிறது.


மாபெரும் ஸ்ரீ ப்ரத்யங்கிரா யாகம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுராவில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி உலக நலன் கருதி பிரதி மாதம் அமாவாசை தோறும் மிளகாய்வற்றல் கொண்டு மாபெரும் ப்ரத்யங்கிரா யாகம் நடைபெற உள்ளது. இந்த யாகத்தில் மிளகாய் வற்றல், வேப்ப எண்ணெய், மிளகு, உப்பு, பலவகையான மூலிகைகள், காய்கறி வகைகள், பழ வகைகள், இனிப்பு, கார வகைகள், பூசணிக்காய், பட்டு வஸ்த்திரங்கள், புஷ்பங்கள், 27 நட்சத்திர தாவரங்கள், நெய், தேன், மஞ்சள், குங்குமம் என இன்னும் எண்ணற்ற சிகப்பு நிறத்தில் உள்ள திரவியங்களையும் பக்தர்களின் நலனுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளது.

ப்ரத்யங்கிரா யாகத்தின் பலன்கள் : இந்த பிரித்தியங்கிரா ஹோமத்தை செய்பவர்களுக்கும் காண்பவர்களுக்கும் சுற்றுப்புறச் சூழலினால் ஏற்படும் டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா, போன்ற பலவிதமான நோய்கள் அகலும்.

பஞ்சபூதங்களினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும், நவக்கிரக தோஷங்கள், கோ சாபங்கள், சுமங்கலி சாபம் போன்ற பல வகையான சாபங்கள் அகலும், பில்லி, சூனியம், ஏவல், செய்வினை அகலும். அபம்ருத்யு தோஷம் (அகால மரணம்), ராகு, கேது தோஷம், கடன்தொல்லை நீங்கும். மேலும் பல வகையான சாபங்கள் நிவர்த்தியாகும். பல்வேறு கிரஹங்களால் வரக்கூடிய தடைகளால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி ஸ்ரீ யக்ஞ சொரூபினி ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவியின் அருளால் ஸகல ஐஸ்வர்யங்கள் பெறலாம்.


ஸ்ரீ சூலினி த்ருஷ்டிதுர்கா யாகம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுராவில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி உலக நலன் கருதி பிரதி மாதம் தேய்பிறை அஷ்டமியில் மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை மஞ்சள், குங்குமம், குங்குலியம், பூசணிக்காய், மிளகாய் வற்றல் கொண்டு த்ருஷ்டிதுர்கா யாகம் நடைபெற உள்ளது.

யாகத்தின் பலன் : சர்ப தோஷம், ராகு தசை, ராகு புக்தியினால் ஏற்படும் தொல்லைகள் அகலவும், செய்வினை கோளாறு, பில்லி சூன்யம் போன்ற மாந்த்ரீகம், தோஷங்கள் அகலவும், திருமணம் கைக்கூடவும், சந்தான ப்ராப்தம் கிடைக்கவும், தொழில் தடைகள், பணப்பிரச்சினை, கடன் பிரச்சினை தீரவும், சத்துருக்களால் ஏற்படும் தொல்லைகள், மரணபயம், மாங்கல்ய தோஷம் அகலவும், நல்ல தொழிலாளர்கள் கிடைத்து தொழில் நல்ல முன்னேற்றம் அடையவும், மண்வளம், மழைவளம் பெருகி இயற்கை வளம் பெறவும், பஞ்ச பூதங்களினால் ஏற்படும் இன்னல்கள் அகலவும், மனிதர்களுக்கு ஏற்படும் சகலவிதமான த்ருஷ்டி தோஷங்கள் நீங்கவும் இந்த ஹோமம் பலன் தரும்.


Upcoming Events
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images